Friday, October 21, 2016

பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே - 43

கண்ணனையும், பலராமனையும் அழைத்துவர கம்சன் அக்ரூரரை அனுப்பினான் என்பதை திருக்கோளூர்ப் பெண் சொன்ன முதல் காரணத்தில் பார்த்தோம்

அக்ரூரர், தேரினைச் செலுத்த, கண்ணனும், பலராமனும் தெருவில் வரும் போது மக்கள் கண்ணனைத் தரிசிக்கக் கூடினர்.பெரும் கூட்டம்.முண்டி அடித்தனர்.அக்கூட்டத்தில் ஒரு பெண்மனியும் இருந்தாள்,அவள் கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு முன்னே வந்தாள்.ஆனால் அவளால் நிமிர்ந்து கண்ணனைப் பார்க்க முடியவில்லை.அவள் முது கூனி இருந்தது.

அவள் ஊர் மக்களுக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து,பிழைப்பு நடத்தி வந்தாள்.

பெரிய தாமரை இலையில் மணக்க மணக்க சந்தனத்தை அரைத்து வைத்துக் கொண்டு காத்திருந்தாள்.கண்ணன் வந்தால் தன் கைகளாலேயே அவனுக்கு சந்தணம் பூச வேண்டும் என்றிருந்தாள்

வைணவ சம்பிரதாயத்தில் ஒரு வழக்கம் உண்டு

மடிதடவாத சோறு,சுருள் நாறாக பூ, சுண்ணாம்பு கலவாத சந்தனம் இவையே எம்பெருமானுக்கு ஏற்றவை

(மடி தடவாத சோறு என்றால் கைமாறு எதிர்பாராத விருந்தோம்பல் - இதை செய்தவர் விதுரர் ஒருவரே)

மணம்  வீசும் மாலைகள் (இதை பூ வியாபாரி அளித்தார் என பார்த்தோம்)

இப்போது இந்த க்கூனி சந்தனத்துடன் நிற்கிறாள்

கண்ணன் பலராமனுடன் வந்துக் கொண்டிருக்கிறார்கள்

தேரை நிறுத்தி அப்பெண்மணியைக் கூப்பிட்டு, "நல்ல சந்தனம் இருந்தால் எனக்குப் பூசு" என்றான் கண்ணன்..அவளும், கண்ணனின் திருமேனியில் சந்தனத்தைப் பூசினாள்

"இந்த சந்தனம் நன்றாய் இல்லையே.வேறு இல்லையா?
 என்கிறான் கண்ணன்

:வேறு சந்தனம் என்றால் என் மேனியைத்தான் சந்தனமாக பூசிக் கொள்ள வேண்டும்.ஏற்றுக் கொள்" என்றாள்

கண்ணன் சிரித்தவாறே அவளது கூன் முதுகைத் தொட்டு அவளை நிமிர்த்தினான்.

அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு சந்தனம் பூசக் கொடுத்தேனா கூனியைப் போலே என்றாள் திருக்கோளூர்ப்பெண் 

No comments:

Post a Comment