Saturday, October 22, 2016

வழி அடிமை செய்தேனோ இலக்குவணனைப் போலே - 46

ராமன் காட்டுக்குச் செல்லுகையில் அவனுடனேயே செல்கிறான் லட்சுமணன்.

ராமனுக்கு, ஒரு கூட்டம் செய்ய வேண்டிய காரியங்களை ஒற்றையாளாய் லட்சுமணன் செய்கிறானாம்.ரமனுக்கு, அவனைப் போல குறிப்பறிந்து பணியாற்றிட யாரும் இல்லையாம்

பஞ்சவடியில் அவர்கள் தங்க பர்ணசாலை அமைக்கிறான் லட்சுமணன்.பின், ராமனைக் கூப்பிட்டுக் காட்டுகிறான்

அதில் யாகம் நடத்த ஒரு இடம், கடவுள் அறை,சமையல் செய்ய் ஒரு அறை என ஒவ்வொன்றாய்க் காட்டுகிறான்.ஒரு அறையைக் காட்டி.."அது.." என ராமன் கேட்டானாம்.அந்த அறை தாங்களும், சீதா பிராட்டியும்   தங்க என் கிறான் லட்சுமணன்

ராமனின் சிந்தையறிந்து செயல் படும் லட்சுமணனைத் தழுவிக் கொண்ட ராமன்"ஒரு தண்ணீர்ப் பந்தலைப் போல அல்லவா நம் தந்தை உன்னை எனக்குத் தந்துவிட்டு சென்றுள்லார்" என அகமகிழ்ந்தான்

லட்சுமணன் அவதாரம் செய்ததே ராமனுக்கு கைங்கர்யம் செய்ய..அப்படிப்பட்ட லட்சுமணனைப் போல நான் எதுவும் செய்யவில்லையே என்று சொல்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:

Post a Comment