Tuesday, October 11, 2016

கர்மத்தால் பெற்றேனோ ஜனகனைப் போலே - 29

மிதிலை மன்னர் ஜனகர், பிரம்மஞானம் அடைய ஒரு குருவைத் தேடிக் கொண்டிருந்தார்.தன் ஞான குருவைத் தேர்ந்தெடுக்க ஒரு போட்டி வைத்தார்.

ஒரு குறிப்பிட்ட தினத்தில் பிரம்ம ஞானிகளின் சபையினைக் கூட்டி, வாதம் நடத்தி, எவர் வாதத்தில் வெல்கின்றனரோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகளும், ஆயிரம் பசுக்களும் தருவதாக
  அறிவித்தார்.பல ஞானிகள் கூடினர்.யாக்ஞவல்கியரும் வருகிறார்

இச்சபையில் யார் தன்னை பிரம்மஞானி என்கிறாரோ அவரே ஆயிரம் பொற்காசுகளும்,பசுக்கலையும் ஓட்டிச் செல்லலாம்.

அதில், யாக்ஞவல்கியரே பிரம்ம ஞானி ஆகிறார். ஜனகர்  சீடராகச் சேர்ந்து  கர்மஞானம் கற்று மிகப்பெரிய ஞானியாக விளங்கினார்

ஜனகரின் ஞானத்தை வெளியுலகிற்கு அறிவிக்க பிரம்மஞானி விரும்பினார்.தனது மந்திர சக்தியால் மிதிலை நகரம் நெருப்புப் பற்றி எரிவதைப் போல ஒரு மாயையை ஏற்படுத்தினார்.சீடர்கள் அனைவரும்,..தங்கள் சொத்துகளை காத்துக் கொள்ள அலறி அடித்து ஓடினர்.ஆனால், ஜனகரோ அசையவில்லை.

பின்னர், ஓடிய சீடர்கள் அது மாயை என உணர்ந்து, வெட்கித் தலை குனிந்தனர்.

யாக்ஞவல்கியர், ஜனகரைப் பார்த்து,"ஜனகரே! அனைவரும் ஓடிய போதும் நீங்கள் ஏன் ஓடவில்லை?" என்றார்

"ஆத்மா அழிவற்றது.இடையில் வருபவை அழியக்கூடியவை.ஆத்மஞானம் அடைய வேண்டுமானால், எனது இப்போதய நிஷ்டையிலிருந்து நான் வெளியே வருவதாக இல்லை" என்றார் ஜனகர்

ஜனகர், ஒரு ராஜ்ஜியத்தின் மன்னனாய் இருந்த போதும் கர்மஞானத்தைக் கடைபிடித்து வந்தார்

அந்த ஜனகரைப் போல கர்மஞானத்தை நான் கடைபிடிக்கவில்லையே..நான் ஏன் இந்த ஊரிலிருக்க வேண்டும் என்றாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:

Post a Comment