Thursday, October 20, 2016

மண்பூவை இட்டேனோ குரவநம்பியைப் போலே - 41


குரும்பருத்த நம்பி (குரவை நம்பி)என்பவர் திருமலையில் குயவனாக இருந்தார்.மண்பானைகள் செய்து வியாபாரம் செய்து வந்தா.தினமும் மீதி இருக்கும் மண்ணில் பூ செய்து திருமலையப்பனுக்கு சமர்ப்பித்து வந்தார்.திருமலையப்பனும் அவர் அளிக்கும் புஷ்பத்தை  ஏற்று தலையில் சூடிக் கொண்டார்


அந்த ஊரை தொண்டைமான் சக்ரவர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான்.அவன் தினமும் சொர்ணப் பூவை அளித்து பெருமானை வேண்டிக் கொள்வான். ஆனால்..சில தினங்களாக திருமலை ஆண்டவனிடம் ஏற்பட்ட மாறுதலைக் கவனித்தான் 

திருமலையப்பன்  தலையில் மண் புஷ்பத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்டு, தன் சந்தேகத்தை அவரிடமே கேட்டு விடுவோம் என பெருமாலைப் பார்த்து...

"ஸ்வாமி, தங்களிடம் சில நாட்களாக வித்தியாசம் தெரிகிறதே?" என்று கேட்டான். 
"அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே?" 

"இல்லை ஸ்வாமி, தங்கள் சிரசிலே புதிதாக மண் புஷ்பம் காணப்படுகிறது.  எனக்குத் தெரியாமல் தங்களுக்கு அணிவிப்பது யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?" 

"அதுவா, அது ஒரு அன்பன் எனக்கு ஆசையாக கொடுத்தான். ஆனால் அவன் சூட்டும் போது என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளான்." 

"அப்படி என்ன சுவாமி நிபத்தனை விடுத்துள்ளான், என்னிடம் கூறக் கூடாதா?" 

"அவன் அனுமதி இல்லாமல் யாருக்கும் அவனைப் பற்றி சொல்லகூடாது.எதற்கும் நாளை அவனிடம் அனுமதி கேட்டு உனக்குச் சொல்கிறேன்" 

மறுநாள் தொண்டைமான் சக்ரவர்த்தி வந்து கேட்டுவிடுவானே என்று, திருமலையப்பனும் குயவன், எப்போதும் போல மண் புஷ்பத்தைக் கொடுக்கும் போது, 
"குயவா, ஒரு நிமிஷம் இரு, உன்னிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும்." 

"ஸ்வாமி,என்னிடமா?" 

"ஆமாம், தொண்டமான் சக்ரவர்த்தி இந்த புஷ்பம் யார் கொடுக்கிறார்கள் என்று கேட்கிறான். 
நீ தான் சூட்டுகிறாய் என அவனிடம் தெரிவிக்கலாமா?" 

"வேண்டாம் ஸ்வாமி. நான் தான் புஷ்பம் சூடுகிறேன் என்பது யாருக்கும் தெரிய வேண்டாம். நான் செய்வது சாதாரண தொண்டு, அதை உலகம் அறியச் செய்யவேண்டுமா? வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாது என்று இருக்கும் போது, சாதாரண ஒரு புஷ்பம் கைங்கர்யம் யாருக்கும் தெரியப்படுத்தாதிர்கள் ஸ்வாமி. அப்படி தெரியப் 
படுத்தணும் என்றால் எனக்கு உடனே நீங்கள் முக்தி கொடுக்கவேணும்" 
என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டான் நம்பி. 

தர்மசங்கடத்தில் ஆழ்ந்தார் திருமலையப்பன். காலையில் எப்போதும் போல தொண்டமான் சக்ரவர்த்தி வந்தார்,. 

திருமலையப்பன் நேற்று நடந்த விஷயத்தைக் கூறி, தான் அவனுக்கு முக்தி கொடுக்க தீர்மானித்து விட்டு, மன்னரிடம் புஷ்பம் யார் சமர்ப்பிக்கிறார்கள் என்று கூறினார். 

அந்த குரவை நம்பியைப் போல மண்பூவை இறைவனுக்கு இட்டேனா நான் (இல்லையே) அதனால் இந்த ஊரைவிட்டுப் போகிறேன் என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:

Post a Comment