Saturday, October 22, 2016

அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமாளைப் போலே - 47

தன் குடிலில் தர்ப்பப் பாயில் படுத்திருந்த ராமனைப் பார்த்து குகன், "ஐயனே...இங்கு என் குடிலில் உங்களுக்கு உண்ண தினைமாவு உள்ளது.தேவர்கள் விரும்பும் கறிசோறு உள்ளது'உங்களை வைத்துத் தாங்க அடிமைகள் நாங்கள் இருக்கிறோம்.விளையாட மான் களும், கங்கை நதியும் உண்டு.நீங்கள் இங்கேயே தங்கி இருக்கலாம்" என்றான்

"குகனே! நெடுங்காலம் வனத்தில் இருந்து அவதியுறுவேன் என எண்ணூகிறாயா?பதினான்கு  வருடங்கள்  ..அவ்வளவுதான்.நீ எங்களை கங்கையின் தென் கரையில் கொண்டு சேர்ப்பாய்.அங்கு இருக்கும் முனிவர்களுடன் புனித வாழ்வை மேற்கொண்டு விடுகிறோம்.நீ ஓடத்தை எடுத்து வா" என்றான் ராமன்

மறுப்பு ஏதும் பேசாத குகன் ஈஅமனையும், சீதாபிராட்டியையு ம், லட்சுமணனையும் படகில் ஏற்றி அக்கரையில் சேர்க்கிறான்..
ராமனும் குகனுடன் ஐவரானோம் என குகனை தன் சகோதரனாக ஏற்கிறான்

அப்படிப்பட்ட குகனைப் போல எம்பெருமானை அக்கரையில் விடும் பாக்கியம் கிடைத்ததா எனக்கு என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:

Post a Comment