Thursday, October 6, 2016

ஏதேனும் என்றேனோ குலசேகரரைப் போலே - 15,

முலசேகர ஆழ்வார் சேர மன்னர்

சோழர்களையும், பாண்டவர்களையு ம் வென்றவர்.சக்கரவர்த்தியாக இருந்தாலும் கூட லௌகீக விஷயங்களில் அவ்வளவாக நாட்டம் இருக்கவில்லை.பரத்வம் என்பது எது..அதை அடைவது எப்படி என்பதிலேயே கவனம் எல்லாம் இருந்தது

திருமாலின் திருவடிகளே முடிவான பரத்வம் என்ற உண்மை அவருக்கு புரிந்தது.அந்த பரத்வத்தை அடைய வேண்டி, பஞ்ச சமஸ்காரங்களையும் கடைப்பிடித்து இறை தொண்டாற்றி வந்தார்

ஸ்ரீராமனிடம் அளவற்ற ஈடுபாடு உண்டு

ஒருமுறை ராமாயண உபந்யாசம் நடந்து கொண்டிருந்த போது, ராமனை எதிர்த்து கரன் என்பவன்பெரும் மனைவியுடன் வந்த கட்டத்தை மிக ரசமாக, நேரில் நிகழ்ந்த நிகழ்ச்சி போல சொல்லிக் கொண்டிருந்தார்.அப்போது குலசேகரர், "காட்டில் ராமர் எப்படையும் இல்லாமல் கரனை எப்படி எதிர் கொள்வார் > "எனக் கூறி தன் தளபதிக்கு பெரும் படையை ராமனுக்கு ஆதரவாக அனுப்ப உத்தரவிட்டார்

அதேபோல அவருக்கு திருவேங்கடமுடையானுடனுடன் கூட ஈடுபாடு உண்டு. கண்னனுக்கு அடிமையாக இருக்க விரும்பினார்.திருமலையில் கோனேரி திர்த்தத்தில் ஒரு கொக்காக பிறக்க விருப்பம் என்றவர்...உடனே..கொக்கை வேடன் அம்பெய்தி கொன்று விட்டால்...என்ற சந்தேகம் வர..மீனாய் பிறக்க விருப்பம் என்றார்..உடனே மீண்டும் சந்தேகம் மீனை கொக்கு உண்டுவிட்டால்...இப்படி ஒவ்வொரு பிறப்பாக பிறக்க விரும்பிய குலசேகரர் கடைசியில், வேங்கடவன் கோயில் வாசல் படியாக இருக்க விரும்புகிறார்.

இந்த பாசுரம் பாடப்பட்ட பின்னரே..வேங்கட மலையில் சந்நிதிக்கு முன் இருக்கும் படிக்கட்டு குலசேகரர் படிக்கட்டு என அழைக்கப் பெற்றது

தேவருலகை ஆளும் பேறு கிடைத்தாலும் விரும்ப மாட்டேன்.திருவேங்கடவன் அருளாட்சி செலுத்தும் திருமலைமீது ஏதாவது ஒன்றாக இருக்க மாட்டேனா என் கிறார்

அதனால்தான் திருக்கோளூர் பெண்பிள்ளை "ஏதேனும் என்றேனோ குலசேகரரைப் போல" என் கிறார் 

No comments:

Post a Comment