Tuesday, October 11, 2016

கடித்து பெற்றேனோ திருமங்கையாழ்வாரப் போலே - 30

சிறுவாலி என்ற நாட்டின் குறுநில மன்னராக விளங்கியவர் பரகாலர் என்னும் திருமங்கையாழ்வார்.இவர் குமுதவல்லியின் அழகில் மயங்கி முறையாகப் பெண் கேட்டுச் செல்கிறார்

ஆனால், குமுதவல்லியோ, வைஷ்ணவரைத் தவிர வேறொருவரை மணக்க மாட்டேன் என்கிறாள்.அதனால் பரகாலர், பஞ்சசமஸ்காரம் செய்து கொண்டு ஸ்ரீவைஷ்ணவர் ஆகிறார்.

இப்போது, குமுதவல்லி, அவர் 1008 வைஷ்ணவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்ற நிபந்தனையை  விதிக்கிறாள்.அதையும் அவர் நிறைவேற்றுகிறார்

குமுதவல்லி சொன்னதற்காக, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும், பெருமாள் கோயில்கள் திருப்பணிகளுக்கும் தன் செவத்தை செலவிடுகிறார்.அதனால், தன்னை குறுநிலமன்னனாக ஆக்கிய சோழ அரசருக்கு அவரால் கப்பம் செலுத்த முடியவில்லை.

அதனால் கைதாகிறார்.

அன்றிரவு பெருமாள் அவர் கனவில் தோன்றி, வேகவதி நதிக்கரையில் புதையல் இருக்கும் ரகசியத்தைக் கூறுகிறார்.சோழ மன்னன் அனுமதியுடன், சிறையில்   இருந்து வருபவர்..புதையலைக் கண்டெடுக்கிறார்

அதில் ஒருபகுதியை கப்பம் கட்டிவிட்டதால் , மீதத்தை பழையபடி செலவிடுகிறார்

மீண்டும் வறுமை

பரகாலராகிய திருமங்கையாழ்வார் இப்போது புது முடிவுக்கு வருகிறார்.
களவு புரிந்து கைங்கர்யம் செய்ய வேண்டும் என்பதே அது

நா ன் கு பேருடன் கூட்டு சேர்ந்து வழிப்பறி செய்ய ஆரம்பிக்கிறார்.செல்வந்தர்கள் தாக்கப் படுகின்றனர்.பொருள்கள் களவாடப்பட்டு எம்பெருமானின் கைங்கர்யத்திற்கு செலவிடப் படுகிறது.

ஒருநாள் பெருமாள், அந்தண வேடமிட்டு லட்சுமியுடன் ஒரு திருமண கோஷ்டி போல தன் பரிவாரங்களுடன் கிளம்பினார்

அவர்களைப் பார்த்ததும் திருமங்கையாழ்வார் "நில்" என்றார்"நகைகள்   எல்லாவற்றையும் கழட்டுங்கள்" என்றார்

பெருமாளும் பயந்தவர் போல நகைகள் அனைத்தையும் கழட்டினார்.லட்சுமியும் கழட்டினார்.கடைசியில், பிராட்டியின் மெட்டி மட்டுமே இருந்தது.

அதைக்கூட விட்டு வைக்க மனமில்லாத திருமங்கையாழ்வார்..அதையும் கழட்டுங்கள் என்றார்.ஆனால் அதை அவரால் கழட்ட முடியவில்லை.

உடனே ஆழ்வார் மண்டியிட்டு கழட்டப் பார்த்தார்.இயலவில்லை.பின்னர், தன் பற்களால் கடித்து கழற்றினார்

எம்பெருமான் சிரித்துக் கொண்டே "நீர் நமது கலியனோ" என்றார்

கழற்றிய ஆபரணங்களை ஒரு பட்டுத் துணியில் மூட்டையாய்க் கட்டி தூக்க முயன்றார் ஆழ்வார்.தூக்க முடியாமல் கனத்தது.

உடன் பெருமாள் "என்னிடம் ஒரு மந்திர சக்தி உள்ளது.அதைச் சொன்னால் எளிதாகத் தூக்க முடியும்" என்றார்.அருகில் இருந்த ஆலமரத்தடியில் அவரை அமர்த்தி, திருமந்திரத்தை ஓதினார்

திருமங்கையாழ்வார் கதறினார்."கண்டுகொண்டேன் நாராயணா என்ற நாமம்" என கூத்தாடினார்

பின்னர் தன் அனுபவங்களை

ஆசு, சித்திரம்,மதுரம்,விஸ்தாரம் என நான்குவகைக் கவிகளாகப்    பாடினார்.

நான்கு வேதங்களின் உட்பொருளை நான்கு பிரபந்தங்களாகப் பாடினார்.

சிக்க்ஷை, வியாகரணம்,கல்பம்,நிருத்தம்,ஜோதிசம்,சந்தஸ்  என ஆறு பிரிவுகளின் உட்பிரிவை பெரிய திருமொழி,திருக்குறுதாண்டகம்,திருநெடுந்தாண்டகம்,திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமடலில் பாடி வைத்தார்

நாலாயிர திவ்வியபிரபந்தத்தில் அதிக பாசுரங்களை பாடி எம்பெருமான் சந்நிதிகளை மங்களாசாசனம் செய்தார்

மெட்டியை கல்லால் கடிக்கப்  போக ;எட்டெழுத்து மந்திரத்தை பகவானே ஆசானாக இருந்து உபதேசம் பெற்ற பாக்கியம் உடையவர் திருமங்கையாழ்வார்

அந்த பாக்கியத்தைப் பெறாத நான் இங்கிருந்தாலென்ன..போனாலென்ன என்கிறாள் திருல்லோளூர்ப் பெண்.
  

No comments:

Post a Comment